Tuesday, September 02, 2014

கோவை, : டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் முறைகேடு மற்றும் மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் டெஸ்ட் டிரைவிங் திடலின் கட்டுமான பணி, கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் ரூ.10 கோடியில், டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதாக, கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. கோவையில் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதற்காக இடமும், ரூ.22.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. கடந்தவாரத்தில் பூமிபூஜை போடப்பட்டு, தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 3 மாதங்களில் பணிகள் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘சிக்னல் விளக்குகள், சாலை பிரிவு, சாலை விதிமுறைகள் கொண்டு கணினி முறையில் டெஸ்ட் டிரைவிங் திடல் வடிவமைக்கப் பட்டுள்ளது. லைசென்ஸ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், கணினியில் பதிவு செய்யப்படும். பின்பு பரிசோதனையில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, இறுதியில் லைசென்ஸ் வழங்கப்படும். வெளியிடங்களுக்கு சென்று வாகனங்களை இயக்கி காட்ட தேவையில்லை. இதனால் பொதுமக்களின் வீண் அலைச்சலும், அதிகாரிகளின் வேலைப்பளுவும் குறையும்’‘ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment