Tuesday, September 02, 2014

கோவை, : டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் முறைகேடு மற்றும் மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் டெஸ்ட் டிரைவிங் திடலின் கட்டுமான பணி, கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் ரூ.10 கோடியில், டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதாக, கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. கோவையில் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதற்காக இடமும், ரூ.22.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. கடந்தவாரத்தில் பூமிபூஜை போடப்பட்டு, தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 3 மாதங்களில் பணிகள் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘சிக்னல் விளக்குகள், சாலை பிரிவு, சாலை விதிமுறைகள் கொண்டு கணினி முறையில் டெஸ்ட் டிரைவிங் திடல் வடிவமைக்கப் பட்டுள்ளது. லைசென்ஸ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், கணினியில் பதிவு செய்யப்படும். பின்பு பரிசோதனையில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, இறுதியில் லைசென்ஸ் வழங்கப்படும். வெளியிடங்களுக்கு சென்று வாகனங்களை இயக்கி காட்ட தேவையில்லை. இதனால் பொதுமக்களின் வீண் அலைச்சலும், அதிகாரிகளின் வேலைப்பளுவும் குறையும்’‘ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
0 comments:
Post a Comment