Tuesday, September 02, 2014
கோவை, : டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் முறைகேடு மற்றும் மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் டெஸ்ட் டிரைவிங் திடலின் கட்டுமான பணி, கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் ரூ.10 கோடியில், டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதாக, கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. கோவையில் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதற்காக இடமும், ரூ.22.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. கடந்தவாரத்தில் பூமிபூஜை போடப்பட்டு, தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 3 மாதங்களில் பணிகள் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘சிக்னல் விளக்குகள், சாலை பிரிவு, சாலை விதிமுறைகள் கொண்டு கணினி முறையில் டெஸ்ட் டிரைவிங் திடல் வடிவமைக்கப் பட்டுள்ளது. லைசென்ஸ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், கணினியில் பதிவு செய்யப்படும். பின்பு பரிசோதனையில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, இறுதியில் லைசென்ஸ் வழங்கப்படும். வெளியிடங்களுக்கு சென்று வாகனங்களை இயக்கி காட்ட தேவையில்லை. இதனால் பொதுமக்களின் வீண் அலைச்சலும், அதிகாரிகளின் வேலைப்பளுவும் குறையும்’‘ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment