Tuesday, September 02, 2014

கோவை, : டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் முறைகேடு மற்றும் மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் டெஸ்ட் டிரைவிங் திடலின் கட்டுமான பணி, கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் ரூ.10 கோடியில், டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதாக, கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. கோவையில் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டெஸ்ட் டிரைவிங் திடல் அமைப்பதற்காக இடமும், ரூ.22.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. கடந்தவாரத்தில் பூமிபூஜை போடப்பட்டு, தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 3 மாதங்களில் பணிகள் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘சிக்னல் விளக்குகள், சாலை பிரிவு, சாலை விதிமுறைகள் கொண்டு கணினி முறையில் டெஸ்ட் டிரைவிங் திடல் வடிவமைக்கப் பட்டுள்ளது. லைசென்ஸ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், கணினியில் பதிவு செய்யப்படும். பின்பு பரிசோதனையில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, இறுதியில் லைசென்ஸ் வழங்கப்படும். வெளியிடங்களுக்கு சென்று வாகனங்களை இயக்கி காட்ட தேவையில்லை. இதனால் பொதுமக்களின் வீண் அலைச்சலும், அதிகாரிகளின் வேலைப்பளுவும் குறையும்’‘ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment