Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச அமைப்பு போர் குற்ற விசாரணை நடத்த ஐ.நா. சபை உத்தரவிட்டுள்ளது.
இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை முன்னாள் ராணுவ வீரர் அஜீத் ரோகணா (வயது 73) என்பவர் போர் குற்ற விசாரணையை எதிர்த்து தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
அஜீத் ரோகணா அதிபர் ராஜபக்சே அரசு பங்களா அருகே உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு அவர் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஐ.நா. சபையின் முன்னாள் மனித உரிமை தலைவர் நவீபிள்ளை வற்புறுத்தல் காரணமாக இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார்.

0 comments: