Thursday, October 16, 2014
திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவருடைய கணவர் சாமிநாதன். சிவகாமியின் தோழியான திருச்சி லால்குடியைச் சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50) மற்றும் கருணாகரன், தங்கவேல் ஆகிய 5 பேரும் சேர்ந்து திருப்பூர் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொடுப்பதாக கூறி பணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 2012–ம் ஆண்டில் பல மகளிர் சுய உதவி குழுக்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி கமிஷன் தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(34) உள்பட 25 பேர் தங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்காக பரமேஸ்வரி மூலமாக சிவகாமிக்கு ரூ.25 லட்சம் வரை கமிஷன் தொகை கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு சிவகாமி, குறைந்தவட்டியில் வங்கிக்கடன் பெற்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொடுத்த ரூ.25 லட்சம் கமிஷனையும் சிவகாமி திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபாலகிஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாமிநாதன் முன்ஜாமீன் பெற்றார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரி, தங்கவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் திருச்சி சென்று பரமேஸ்வரியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான தங்கவேலை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment