Thursday, October 16, 2014
திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவருடைய கணவர் சாமிநாதன். சிவகாமியின் தோழியான திருச்சி லால்குடியைச் சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50) மற்றும் கருணாகரன், தங்கவேல் ஆகிய 5 பேரும் சேர்ந்து திருப்பூர் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொடுப்பதாக கூறி பணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 2012–ம் ஆண்டில் பல மகளிர் சுய உதவி குழுக்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி கமிஷன் தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(34) உள்பட 25 பேர் தங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்காக பரமேஸ்வரி மூலமாக சிவகாமிக்கு ரூ.25 லட்சம் வரை கமிஷன் தொகை கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு சிவகாமி, குறைந்தவட்டியில் வங்கிக்கடன் பெற்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொடுத்த ரூ.25 லட்சம் கமிஷனையும் சிவகாமி திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபாலகிஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாமிநாதன் முன்ஜாமீன் பெற்றார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரி, தங்கவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் திருச்சி சென்று பரமேஸ்வரியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான தங்கவேலை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment