Wednesday, October 29, 2014
அமராவதி அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ள அபாயம் கரூர், : அமராவதி அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அமராவதி அணை உள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி நீரைப் பயன்படுத்தி சுமார் 40ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. பழைய ஆயக்கட்டுப் பகுதிகள், புதிய ஆயக்கட்டுப்பகுதிகள், நீரேற்றுப்பாசன பகுதிகள் உள்ளன.மேலும் உள்ளாட்சிகளின் குடிநீர் கிணறுகளும் அமராவதி அணை நீரை நம்பி நீரேற்றம் செய்துகொண்டிருக்கின்றன. முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டுவந்த நிலையில் மழை காரணமாக நீர்த் திறப்பு நிறுத்தப்பட்டது.
தொடர் மழையாலும் பழனி பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும் நங்காஞ்சியாறு போன்ற உப நதிகளில் இருந்து வரும் வெள்ளநீரும் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. கரூர் பகுதிக்கு கரூர் அருகே உள்ள செட்டிபாளையம் தடுப்பணைக்கு அமராவதி நீர்வந்து அங்கிருந்து கரூர், பாலம்மாள்புரம். மேலப்பாளையம் பகுதி வழியாக கடைமடை பகுதியான திருமுக்கூடலூர் செல்கிறது. அங்குள்ள காவிரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீர் கலக்கிறது. செட்டிபாளையம் தடுப்பணை ரெகுலேட்டர்கள் மூலமாக பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
கடந்த 15 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததாலும், தண்ணீர் திறந்துவிடாததாலும், அணையின் நீர்மட்டம் மள மள என உயர்ந்துவருகிறது. தற்போது அமராவதி அணையில் 85 அடிநீர் உள்ளதால் எந்நேரமும் அணை நிரம்பலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அணை நிரம்பியது. முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதனையடுத்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து உபரி நீரானது வினாடிக்கு 27ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர அமராவதி கிளை ஆறுகளில் இருந்து 10ஆயிரம் கன அடிநீர் ஆற்றில் கலக்கிறது. கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் தற்போது 37ஆயிரம் கன அடிநீர்வந்துகொண்டிருக்கிறது.ஆற்றில் இறங்க வேண்டாம்
கரூர் கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அமராவதி அணையின் முழுகொள்ளளவை நெருங்கியதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவந்துகொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததன்காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ததன் காரணமாக குடகனாற்றில் வெள்ளப்பெருக்கும், ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வெள்ளநீர் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, பவானி, நொய்யல், குடனகனாறு, காவிரி ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிப்பதற்காகவும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஆற்றில் கால்நடைகளுடன் தண்ணீரில் இறங்க வேண்டாம்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படின் மாவட்ட போரிடர் அவசரகால இயக்க மையத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசிக்கோ (எண் 1077) அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment