Monday, October 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள சங்கிலிப்பள்ளம் ஓடையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் நேரம் ஆக, ஆக தண்ணீர் வரத்து குறைந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சங்கிலிப்பள்ளம் ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக வெள்ளியங்காடு முத்தையன்கோவில், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. காங்கயம் ரோடு, புஷ்பாநகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இது தவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறனர். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் மாநகரா ட்சி மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
இதன்காரணமாக வெள்ளியங்காடு முத்தையன்கோவில், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. காங்கயம் ரோடு, புஷ்பாநகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இது தவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறனர். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் மாநகரா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment