Monday, October 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள சங்கிலிப்பள்ளம் ஓடையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் நேரம் ஆக, ஆக தண்ணீர் வரத்து குறைந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சங்கிலிப்பள்ளம் ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக வெள்ளியங்காடு முத்தையன்கோவில், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. காங்கயம் ரோடு, புஷ்பாநகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இது தவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறனர். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் மாநகரா ட்சி மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
இதன்காரணமாக வெள்ளியங்காடு முத்தையன்கோவில், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. காங்கயம் ரோடு, புஷ்பாநகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இது தவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறனர். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் மாநகரா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment