Saturday, October 04, 2014
வெள்ளகோவில்,
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் இருந்து தாராபுரம் வரை 100 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் 6–ந்தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம், நகராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி 6–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த மனித சங்கிலி போராட்டம் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தொடங்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபுரம் வரை நடைபெறும். இந்த போராட்டத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1½ லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருக்கும் வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டாம். தொழிலாளர்களை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.
ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு செயலாளர்கள், ஆகியோர் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களை திரட்டி கலந்து கொள்ள செய்ய வேண்டும். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மளிகைகடை வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடை உரிமையாளர்கள், சுமை தூக்குவோர் சங்கத்தினர், மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment