Wednesday, October 01, 2014
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்பை பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் பதவி ஏற்றுள்ள புதிய முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எனது சார்பிலும், கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. தலைமையின் மீதுள்ள பாசம் காரணமாக உணர்ச்சியால், தொண்டர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பு. ஆனால் அது பொதுமக்களை பாதிப்பதாக இருந்துவிடக்கூடாது.
இந்த போராட்டத்தின் போது கடைகள் மீது தாக்குதல், பஸ்களுக்கு தீ வைத்தல் போன்றவை அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும்.
பா.ஜனதா கட்சி தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது. பா.ஜனதாவுக்கு ரஜினிகாந்த் வந்தால் மகிழ்ச்சிதான். நல்லவர்கள் வருவது நல்லதுதான். நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை விளங்குகிறது. அதுபோன்று தமிழ்நாட்டின் தொழில்நகரமாக கோவை விளங்குகிறது. கோவைக்கு பாதிப்பு என்றால் அது எல்லோரையும் பாதிக்கும். ஆகவே கோவை தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு உதவிகரமாக இருந்து நடவடிக்கை எடுக்கும். ஜவுளிநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. சென்ற இடமெல்லாம் அவருக்கு எந்த தலைவருக்கும் அளிக்கப்படாத அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment