Saturday, October 18, 2014
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளேஅண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள்திருப்பூர் மேயர் விசாலாட்சி சூளுரை
திருப்பூர்,அக்.18-
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் என திருப்பூர் மேயர் விசாலாட்சி கூறினார்.
திருப்பூர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலை ஜாமீன் கிடத்ததையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டனர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினர்.மேலும்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 21நாட்களாக அணிந்திருந்த கருப்புச்சட்டையை கழற்ற்றி விட்டு வெள்ளை சட்டையை அணிந்துக்கொண்டனர்.
ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும்,உள்நோக் கத்துடனும்,பகைமையுணர்ச்சியோடு ம்,வெறுப்புடனும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் எதிரிகளால்,அவர் மீது கொடுக்கப்பட்ட பொய் வழக்கில் எதிரிகளுக்கு தற்காலிகமான வெற்றி கிடைத்தது.அதன் அடிப்படையில் ஜெயலலிதா 21நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவர் விடுதலை பெற வேண்டி அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களின் அறப்போராட்டத்தினா லும்,அருள் வேண்டுதல்களாலும் ஜாமீனில் வெளியானது மனதிற்கு நிம்மதி தருகிறது.கூடிய விரைவில் அவர் பொய் வழக்கில் இருந்து முழு வெற்றிப்பெற்று முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுப்பட்டு நரகாசுரர்களை அழித்து நாடாளும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஜெயலலிதா நாடாளும் நன்நாளே தமிழர்களுக்கு தீபாவளி திருநாள்,
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
முன்னதாக நேற்று காலை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் அக்கட்சியின் 43 வது ஆண்டு துவக்கவிழா குள்ளிச்செட்டியார் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் எளிமையான முறையில் கொடியேற்று விழா நடந்தது.அதன் பின்னர் பார்க் ரோட்டில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலைக்கு நடந்து சென்று நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாபேரவை செயலாளர்வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி.மார்க்கெட் நா.சக்திவேல், அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஏ.ஸ்டீபன்ராஜ்,ஏ.எஸ்,சதீஷ், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கோமதிசம்பத், வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், பூளுவபட்டி பாலு, வேலம்பாளையம் அய்யாசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ஹரிஹரசுதன், சி.எஸ் .கண்ணபிரான், ரகுநாதன், பி.கே.எஸ்.சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், அசோக்குமார்,பெரிச்சிபாளையம் ஈஸ ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தி னம்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், கு ணசேகர், விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, சபரீஷ்வரன், செந்தில்குமார், பேபி தர்மலிங்கம், முன்னால் கவுன்சிலர்கள் சு.கேசவன்,ருக்கு மணி, ராஜகோபால், பேபி பழனிசாமி மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீதி ராஜன், ஆண்டவர் பழனிசாமி, பங்க் என்.ரமேஷ், என்.சரவணன், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன்,ராஜேந்திரன், மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், வேங்கை வி ஜயகுமார், எம்.ஜி.குணசேகரன், மதுரபாரதி உள்ளிட்டவர்களும், பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன்,மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தராம்பாள் கேசவன், மும்தாஜ், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
0 comments:
Post a Comment