Saturday, October 18, 2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் விடுதலையை கொண்டாடினார்கள். ஈரோட்டில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு கூடினார்கள். அவர்கள் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். மகளிர் அணியினர் சிலர் மகிழ்ச்சி காரணமாக மேயர் மல்லிகா பரமசிவத்தை சுமந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்கள் நேர்ச்சையை செலுத்தினார்கள். பெரிய மாரியம்மனுக்கு அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011–ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
திருச்சியில் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது நடைப...
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
0 comments:
Post a Comment