Saturday, October 18, 2014
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–இலங்கை அகதி
ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர் இலங்கேஸ்வரன் (வயது 49). அவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு இந்துமதி (25), துர்கா (22) ஆகிய 2 மகள்களும், ஜெகதீஸ்வரன் (16), வெங்கடேஸ்வரன் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென இலங்கேஸ்வரன் யாரிடமும் சொல்லாமல் அகதிகள் முகாமை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பதிவேட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அகதிகள் முகாமுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது பெயரை மீண்டும் அரசு பதிவேட்டில் சேர்த்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இலங்கேஸ்வரன் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இலங்கேஸ்வரன் நேற்று மாலை அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இலங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர் இலங்கேஸ்வரன் (வயது 49). அவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு இந்துமதி (25), துர்கா (22) ஆகிய 2 மகள்களும், ஜெகதீஸ்வரன் (16), வெங்கடேஸ்வரன் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென இலங்கேஸ்வரன் யாரிடமும் சொல்லாமல் அகதிகள் முகாமை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பதிவேட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அகதிகள் முகாமுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது பெயரை மீண்டும் அரசு பதிவேட்டில் சேர்த்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இலங்கேஸ்வரன் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இலங்கேஸ்வரன் நேற்று மாலை அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இலங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment