Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்களின் மகன் ரஞ்சித்குமார்(22).இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்து கடந்த 6 மாதமாக வேலை தேடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை பழனிசாமி கட்டிட வேலை செய்தபோது அடிபட்டு வேலைக்கு போக முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.ரஞ்சித்குமாரும் தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்துள்ளார்.இந்த நிலையில் தனக்கும் வேலை கிடைக்கவில்லை, தந்தை நிலையும் இப்படி ஆகிவிட்டதே என்று வேதனையடைந்த ரஞ்சித்குமார் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: