Saturday, October 18, 2014
திருப்பூர் வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரபல கல்வியாளர்கள், சமூக அறிஞர்கள் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
திருப்பூர் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சனியன்று ஜெகா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் டிக்ஸன் குப்புசாமி தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சிதம்பரநாதன், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர் ஜெகநாதன், பொருளாளர் கே.முருகேசன், நிர்வாகக்குழு உறுப்பினர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இவர்களுடன் பத்மாவதிபுரம் அறிவுத்திருக்கோயில் நிர்வாகிகள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் 266 பேருக்கும், பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் 264 பேருக்கும் தனித்தனி அரங்குகளில் ஆலோசனை வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் 60 பேருக்கும், மாணாக்கர்களின் பெற்றோர்கள் சுமார் 300 பேருக்கும் தனித்தனியாக நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதில் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கே.செல்வராஜன், அமிர்தா பல்கலைக்கழக மக்கள் தொடர்பு இயக்குநர் பேராசிரியர் எஸ்.ரங்கநாதன், கே.பி.ஆ்ர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர், பயிற்சியாளர் பொறிஞர் எம்.தேவதாஸ், மனோதத்துவ ஆலோசகர் டாக்டர் எம்.எஸ்.கே.முகையதீன், தைரோகேர் இயக்குநர் ஏ.ரத்தினசாமி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் புவியரசு, கோவை பிஎஸ்ஜி எப்எம் ரேடியோ திட்ட இயக்குநர் பி.சுதாகர், யுவதி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ஏ.எஸ்.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அவர்களது சமூகப் பொருளாதார நிலைக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்வதற்கான பொருத்தமான ஆலோசனைகள் வழங்கினர்.
மாணவர்களுக்கு பாடம் பயிலும் முறை, நினைவில் வைத்துக் கொள்வதற்கான நுட்பம், தேர்வு அச்சத்தில் இருந்து விடுபடுதல், தாழ்வுமனப்பான்மையை புறந்தள்ளுதல், உற்சாகப்படுத்துதல், உடல்நலம் பேணுதல் கையெழுத்து நுட்பம், நேர மேலாண்மை குறித்து விரிவாக விளக்கினர்.
அதேபோல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் திறனை கண்டறிந்து பயிற்சி அளிப்பது, அவர்களை ஊக்கப்படுத்துவது, ஆளுமையை மேம்படுத்துவது தொடர்பாகவும் விளக்கினர். பெற்றோர்கள் மாணவர்களிடம் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றது, மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டுப் பிள்ளைகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் வெற்றி பெறுவதற்காக தேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட இந்த முகாம் நடத்தப்பட்டதாக பள்ளி வளர்ச்சிக்குழுவினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment