Wednesday, October 01, 2014
திருப்பூரில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்து பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் மகாசபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்து பேசினார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவின் 58–வது ஆண்டு மகாசபை கூட்டம் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் சைமா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் பொன்னுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:– வெளிமாநில பின்னலாடை விற்பனையில் ‘சி‘படிவம் சமர்ப்பிக்காதவர்கள் 5 சதவீதம் செலுத்தி 4 சதவீதம் திரும்ப பெறும்போது ஏற்படும் தாமதத்தை தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பனியன் பொருட்களுக்கு பேக்கிங் கமாடிட்டி எனப்படும் எடையளவு சட்டத்தில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை கேட்டுக்கொள்வது, தடையில்லாத மின்சாரம் வழங்கவும், பனியன் தொழில் சார்ந்த அனைத்து உப தொழில்களுக்கும் மின்சார உபயோகத்திற்கு தொழிற்சாலைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தொழிலாளர்கள் பயன்பெற இ.எஸ்.ஐ மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் பேசும்போது கூறியதாவது:–
திருப்பூர் நகரின் கடந்த கால வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சுமார் 5 ஆயிரம் பேர் வேலை செய்யும் அளவில் திருப்பூரில் இருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமங்களில் 4 அல்லது 5 தொழிற்பேட்டைகளை அமைத்து அதில் அந்த கிராமத்தை சேர்ந்த, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களையும், அதில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் சுமார் 25 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இதனால் வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் குறிப்பாக மகளிர் பாதுகாப்பாக வேலைகளில் சேர வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருப்பூரின் பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க முடியும். சைமா சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுமானப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. பனியன் தொழில் குறித்த அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சைமா சங்கம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சங்க துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், முன்னாள் தலைவர் கரோனா சாமிநாதன், பொருளாளர் ராமசாமி, ஆடிட்டர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment