Wednesday, October 01, 2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம்,கொழுமம்,குமரலிங்கம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் பஸ் நிலையம் அருகே மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. பேராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கே.பி.ரவி, மடத்துக்குளம் பேரூர் துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் ராமுத்தாய், கொழுமம் ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ், வீரமணி, முத்துராமலிங்கம், மைதீன்பாட்சா, சுப்பிரமணி, வடிவேலு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் கே.என்.ராசு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.ராமகிருஷ்ணன், கே.கே.பன்னீர் செல்வம், ராஜ்குமார், சிவலிங்கம், கணியூர் பேரூராட்சி தலைவர் தேவி, துணைத் தலைவர் காஜாமைதீன், முத்துசாமி, சிராஜூதீன், முருகேசன், கணேசமூர்த்தி, மணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரலிங்கத்தில் பேரூர் செயலாளர் கே.ஏ.வரதராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கே.ஆர்.சிவக்குமார், துணைத்தலைவர் எம்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் மற்றும் அ.திமு.க.வினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதே போல் துங்காவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment