Wednesday, October 01, 2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம்,கொழுமம்,குமரலிங்கம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் பஸ் நிலையம் அருகே மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. பேராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கே.பி.ரவி, மடத்துக்குளம் பேரூர் துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் ராமுத்தாய், கொழுமம் ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ், வீரமணி, முத்துராமலிங்கம், மைதீன்பாட்சா, சுப்பிரமணி, வடிவேலு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் கே.என்.ராசு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.ராமகிருஷ்ணன், கே.கே.பன்னீர் செல்வம், ராஜ்குமார், சிவலிங்கம், கணியூர் பேரூராட்சி தலைவர் தேவி, துணைத் தலைவர் காஜாமைதீன், முத்துசாமி, சிராஜூதீன், முருகேசன், கணேசமூர்த்தி, மணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரலிங்கத்தில் பேரூர் செயலாளர் கே.ஏ.வரதராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கே.ஆர்.சிவக்குமார், துணைத்தலைவர் எம்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் மற்றும் அ.திமு.க.வினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதே போல் துங்காவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment