Wednesday, October 29, 2014
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
கன மழையால்பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரண உதவி எம்எல்ஏ வழங்கினார் அரவக்குறிச்சி, : கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து 5 அடி உயரம் வரை தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு உள் ளிட்ட மளிகை சாமான்கள், பாத்திரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சவேரியார் தெரு, சின்னப்ப பள்ளிவாசல் தெரு, பூச்சாங்கிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட்டு பொதுமக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1000 மற்றும் உணவுப் பொட்டலம் உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன் னியூர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி நகரச் செயலாளர் அண்ணா துரை, பள்ளபட்டி நகர திமுக செயலாளர் தோட்டம் பசீர்அகமது, இளைஞர் அணி, ஆனந்தகுமார், திருக்குமார் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
0 comments:
Post a Comment