Wednesday, October 29, 2014
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
கன மழையால்பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரண உதவி எம்எல்ஏ வழங்கினார் அரவக்குறிச்சி, : கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து 5 அடி உயரம் வரை தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு உள் ளிட்ட மளிகை சாமான்கள், பாத்திரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சவேரியார் தெரு, சின்னப்ப பள்ளிவாசல் தெரு, பூச்சாங்கிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட்டு பொதுமக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1000 மற்றும் உணவுப் பொட்டலம் உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன் னியூர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி நகரச் செயலாளர் அண்ணா துரை, பள்ளபட்டி நகர திமுக செயலாளர் தோட்டம் பசீர்அகமது, இளைஞர் அணி, ஆனந்தகுமார், திருக்குமார் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
Today evening Coimbatore CBOA team ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and h...
0 comments:
Post a Comment