Sunday, October 12, 2014

மேலும் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட நினைப்பவர்கள் இப்போதே ரெயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொது மக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சிலர் லக்கேஜூடன் பட்டாசுகளையும் எடுத்து செல்வது வழக்கம். இதனால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பஸ், ரெயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும்போது ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்க தெற்கு ரெயில்வேயின் பாதுகாப்பு படை தலைமை ஆணையர் மோகன், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்ட பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ரெயில்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி யாராவது கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரெயில்வே சட்டப்படி அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரெயில்களில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதேபோல் பஸ்களில் பட்டாசு பார்சல்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த பஸ்களில் உள்ள கண்டக்டர்கள் பயணிகளை கண்காணிக்க வேண்டும் எனவும், பயணிகள் யாராவது பட்டாசு எடுத்து சென்றால் அவர்களை பிடித்து அருகில் உள்ள போலீசில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
0 comments:
Post a Comment