Sunday, October 12, 2014
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் உள்ளார். அவர் விரைவில் விடுதலையாகி வரவேண்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நீண்ட ஆரோக்யத்துடன் வாழ வேண்டியும் திருப்பூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில்வரை அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரை சென்றனர். இந்த பாதயாத்திரையில் பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர்.
இதை தொடர்ந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் வாசலில் மங்கலம் ஊராட்சி தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் தலைமையில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்தனர். பின்னர் கோவிலில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கரைபுதூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், கொடுவாய் லோகநாதன், மாநகராட்சி கணக்குகுழுத் தலைவர் வசந்தாமணி, கவுன்சிலர்கள் கேபிள் சிவா, லட்சுமி, வேலுசாமி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், இடுவாய் ஊராட்சி கழக செயலாளர் சென்னியப்பன், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைதலைவர் வெங்கடாசலம், இடுவாய் ஊராட்சி தலைவர் லட்சுமி செல்வராஜ், மங்கலம் ஊராட்சி மன்ற மன்ற துணை தலைவர் அஸ்கர்அலி, மற்றும் உறுப்பினர் கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
0 comments:
Post a Comment