Saturday, October 04, 2014
அறச்சலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அறச்சலூர் நடுவீதியை சேர்ந்தவர் அன்புராஜ். அவருடைய மகன் அருண்குமார் (வயது 17). அறச்சலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதிபூஜை என்பதால், கடையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது கடையில் உள்ள தள்ளுவண்டியை கழுவுவதற்காக அருண்குமார் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
வாய்காலுக்கு சென்றவர் மாலை வரை கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் ஊழியர்களுடன் வாய்க்காலுக்கு சென்று பார்த்தார்.
வாய்க்கால் கரையில் தள்ளுவண்டி நின்றது. அருண்குமாரின் உடைகள் கிடந்தன. அருண்குமாரை காணவில்லை. இதனால் அவர் வாய்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் அருண்குமாரின் பெற்றோருக்கும், அறச்சலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அறச்சலூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்தங்காடு என்ற இடத்தில் வாய்க்கால் தண்ணீரில் அருண்குமார் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டார்கள். அருண்குமார் வாய்க்காலில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனின் உடலை பார்த்து அருண்குமாரின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment