Monday, October 13, 2014
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது பிறந்தநாளையொட்டி அவரும், அவரது நண்பர்களும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் சத்தம் போட்டு கொண்டாடினர். இந்த சத்தம் அப்பகுதியில் வசித்துவரும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைதொடந்து சிலர் அவர்களிடம் சென்று சண்டை போட்டனர். இதற்கு பட்டாசு வெடித்தவர்கள் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு பின்னர் கிரிக்கெட் மட்டை மற்றும் கம்புகளால் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்களை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்சை ஒருதரப்பினர் தடுத்து காயம்பட்டவர்களை ஏற்ற விடாமல் திருப்பி அனுப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்களுக்கு அவினாசி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து அங்கு வந்த உதவி கமிஷனர் ஜெயசந்திரன் அவர்களை சமாதானம் செய்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஏட்டு அற்புதம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்டதாக மனோஜ்குமார், நடராஜ், சிவசாமி, வேலுசாமி, ராசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...

0 comments:
Post a Comment