Monday, October 13, 2014
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது பிறந்தநாளையொட்டி அவரும், அவரது நண்பர்களும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் சத்தம் போட்டு கொண்டாடினர். இந்த சத்தம் அப்பகுதியில் வசித்துவரும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைதொடந்து சிலர் அவர்களிடம் சென்று சண்டை போட்டனர். இதற்கு பட்டாசு வெடித்தவர்கள் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு பின்னர் கிரிக்கெட் மட்டை மற்றும் கம்புகளால் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்களை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்சை ஒருதரப்பினர் தடுத்து காயம்பட்டவர்களை ஏற்ற விடாமல் திருப்பி அனுப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்களுக்கு அவினாசி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து அங்கு வந்த உதவி கமிஷனர் ஜெயசந்திரன் அவர்களை சமாதானம் செய்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஏட்டு அற்புதம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்டதாக மனோஜ்குமார், நடராஜ், சிவசாமி, வேலுசாமி, ராசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...

0 comments:
Post a Comment