Monday, October 27, 2014

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31–12–1996க்கு முன்னர் பிறந்தவர்கள்) புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக இன்டர்நெட் மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதி சென்ற ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இணையதள மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவத்தை குறைந்த செலவில் விரைவாகவும், எளிதாகவும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதுடன் அலைச்சலும் காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் தாங்கள் அளித்த மனுவின் நடவடிக்கை விவரங்களை இம்மையங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது. சொந்தமாக இணையதள வசதி உள்ளவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க இணையதள மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment