Wednesday, October 01, 2014
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் சோகத்தில் கோவை அ.தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பூசாரிப்பாளையம், சத்யாநகரை சேர்ந்த செல்லமுத்து என்பவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 35), அ.தி.மு.க. உறுப்பினர். கட்டிடங்களுக்கு அலுமினிய ஜன்னல் மற்றும் கம்பிகளை பொருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடந்த 27–ந் தேதி முதல் ரஜினிகாந்த் சோகத்தில் இருந்தார்.
கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர், அந்த பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம், ‘ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் குமார் உள்பட பலர் கலந்துகொள்ளச்சென்றனர். வீட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு அந்த படத்தின் முன்பு ரஜினிகாந்த் சோகமாக காணப்பட்டார்.
திடீரென்று விஷத்தை எடுத்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment