Wednesday, October 01, 2014
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் சோகத்தில் கோவை அ.தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பூசாரிப்பாளையம், சத்யாநகரை சேர்ந்த செல்லமுத்து என்பவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 35), அ.தி.மு.க. உறுப்பினர். கட்டிடங்களுக்கு அலுமினிய ஜன்னல் மற்றும் கம்பிகளை பொருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடந்த 27–ந் தேதி முதல் ரஜினிகாந்த் சோகத்தில் இருந்தார்.
கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர், அந்த பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம், ‘ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் குமார் உள்பட பலர் கலந்துகொள்ளச்சென்றனர். வீட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு அந்த படத்தின் முன்பு ரஜினிகாந்த் சோகமாக காணப்பட்டார்.
திடீரென்று விஷத்தை எடுத்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment