Saturday, October 04, 2014
சென்னை மெரினாவில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கார் டிரைவரான இவர் கடந்த புதன்கிழமை அன்று காலையில், மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரில் கடற்கரை மணலில் பிணமாக கிடந்தார். கத்தியால் குத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்
இந்த நிலையில் டிரைவர் கார்த்திக் எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்று துப்புதுலங்கி விட்டதாக நேற்று இரவு பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணை முடிவடையாததால், போலீசார் தகவல்களை வெளியிட மறுத்தனர்.
கொலை செய்யப்பட்ட டிரைவர் கார்த்திக்கின் மனைவி மற்றும் 4 பேரை போலீசார் நேற்று இரவு பிடித்து வந்தனர். மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கார்த்திக் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு போனார். அண்மையில் தான் விடுதலையாகி வந்தார். விடுதலையாகி வந்தவுடன் அவரை தீர்த்துக்கட்டி விட்டனர். அவரது மனைவியுடன் நல்லபடியான இல்லற வாழ்க்கையில் அவர் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.
அவர்கள் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இல்லற வாழ்க்கையில் வீசிய புயல்தான், கார்த்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு தொழில் பின்னணியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற இன்னொரு கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment