Tuesday, October 28, 2014
செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகளை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆர்.பழனிச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக் கொடுத்தனர்.
செங்கப்பள்ளி கூட்டுறவு சங்கச் செயலர் சோமசுந்தரம், நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர் சின்னசாமி உள்ளி்டவர்களால் நடைபெற்ற மோசடி காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 20ம் தேதி முதல் மாநில அமைச்சர், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல தடவை சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் நகைகள் சிக்கியிருக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஏற்கனவே நகைகளைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த பிறகு, கூட்டுறவு துணைப் பதிவாளரும், சங்கத் தலைவரும் அந்த நகைகளை திரும்ப அளிக்காமல் மறுத்து வருகிறார்கள்.
கடன் பெற்றோர் உண்மையான அசல் அதற்குண்டான வட்டியை செலுத்த தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment