Saturday, November 01, 2014
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் பி.என்.ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருப்பூர் கல்லூரி சாலை கண்ணகி நகரை சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ்(வயது 55) என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி ரூ.10 கோடிக்கான காசோலையை வசூலுக்கு செலுத்தினார். அந்த காசோலை, மேற்குவங்காளத்தில் உள்ள மத்திய நிலக்கரி சுரங்க தொழிலாளர் சேமநலநிதி அமைப்பின் மண்டல கமிஷனர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வழக்கம்போல் வங்கி அதிகாரிகள் அந்த காசோலையை மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தங்களது வங்கி கிளைக்கு வசூலுக்காக அனுப்பினார்கள். அப்போது, செல்வராஜ் கொடுத்த ரூ.10 கோடிக்கான காசோலையில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணுடைய காசோலை கடந்த ஜூலை மாதம் 1–ந் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வங்கியிலேயே ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 452–க்கு வசூலுக்கு செலுத்தப்பட்டு பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதனால் செல்வராஜ் கொடுத்த காசோலை போலியானது என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் பி.என்.ரோடு பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் மோகன்குமார், அந்த காசோலைக்கு உரிய பணத்தை கொடுக்காமல் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலி காசோலை தயாரிக்க, திருப்பூரை சேர்ந்த அன்பு(48), பிரதீப்குமார்(34), செந்தில்குமார்(41), கருப்பையா(46) ஆகியோர் உள்பட மேலும் சிலர் செல்வராஜுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், அன்பு, பிரதீப்குமார், செந்தில்குமார், கருப்பையா ஆகிய 5 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபோல் வங்கியில் போலியான காசோலைகள் கொடுத்து ஏமாற்றும் நபர்கள் அடையாளம் காண்பதில் வங்கி அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், காசோலைகளின் மீது பணம் கொடுப்பதற்கு முன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் அறிவுறுத்தி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment