Saturday, November 01, 2014
காங்கயத்தில் போலீசாருக்கு உதவும் வகையில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து சீர்படுத்துவது, திருவிழா காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் விபத்து காலங்களில் செய்யவேண்டிய உதவிகள், வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை போலீஸ் தலைமை காவலர் கணேஷ்பாபு மற்றும் காங்கயம் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் பூபதி ஆகியோர் அளித்தனர். கடந்த ஒரு மாத காலமாக நடந்த இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஊர்க்காவல் படையின் மண்டல துணை தளபதி ஆர்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment