Saturday, November 01, 2014
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, ரூ.100, ரூ.500 கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சு எந்திரம் மூலம் அச்சடிக்கும் பணியில் சிலர் ஈடு பட்டுக்கொண்டு இருந்தனர்.
உடனே போலீசார் அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் ஜபருல்லா, ராஜசேகரன், ஷாஜி, முத்துசாமி, சுடலை, பேராச்சி, கருப்பையா, தாமோதரன், சீதாலட்சுமி, செந்தில்குமார் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜபருல்லா தவிர மற்ற 9 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஜபருல்லா தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் 1998–ம் ஆண்டு நடந்தது.
மேலும் அந்த வீட்டில் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய அச்சு எந்திரங்கள், வெட்டு எந்திரங்கள், ‘பிலீம் ரோல்’ போன்றவற்றையும், ரூ.50 லட்சத்து 64 ஆயிரத்து 200 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு பின்னர் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
சீதாலட்சுமி தவிர மற்ற 8 பேரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே கருப்பையா இறந்து விட்டார்.
இதில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஷாஜி, முத்துசாமி, சுடலை, தாமோதரன், செந்தில்குமார் ஆகிய 5 பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், சீதாலட்சுமி தொடர்ந்து சிறையில் இருந்து வருவதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ராஜசேகரன், பேராச்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஜபருல்லா தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொது...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
0 comments:
Post a Comment