Friday, November 07, 2014
இண்டியன் ஆயில் கார்போரேசன் நிறுவனம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இண்டியன் ஆயில் கார்போரேசன் டீலர்கள் இணைந்து இண்டியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்தின் தரம் மற்றும் அதன் அளவீடுகள் சரியாக உள்ளதா? மக்களுக்கு இந்த நிறுவனம் எந்தெந்த வகையில் சேவை செய்து வருகிறது உள்பட பலவேறு அம்சங்கள் குறித்து பொது மக்களுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினம்தோறும் தீபாவளி என்ற விழாவை கடந்த 1 மாதமாக கொண்டாடிவருகிறது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 இண்டியன் ஆயில் கார்போரேசன் டீலர்கள் சார்ந்த பெட்ரோல் பங்குகளில் தினமும் ரூ 300 முதல் ரூ 500 வரை பெட்ரோல் அடிக்கும் வாடிக்கையாளர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ 100 மதிப்புள்ள பெட்ரோல் அல்லது அதன் மதிப்பிலான ஒரு பொருள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ரூ 200 க்கு மேல் பெட்ரோல் அடிப்பர்வர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு,அதில் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ 44 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் என 28 பேருக்கு ரூ 12 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 28 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி 28 பெட்ரோல் பங்குகளிலும் தனித்தனியாக அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து தினந்தோரும் தீபாவளி திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட அனைத்து அதிர்ஷ்டசாலிகளுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா பெரியார் காலனியில் உள்ள பரணி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கோவை இண்டியன் ஆயில் கார்போரேசன் முதன்மை டிவிசனல் சில்லறை விற்பனை பிரிவு மேலாளர் சரத்குமார் தலைமை தாங்கினார். ஐ.ஒ.பி.வங்கி உதவி மேலாளர் வர்கிஸ், இண்டியன் ஆயில் கார்போரேசன் திருப்பூர் ஏரியா உதவி மேலாளர் கார்த்திக்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி பெட்ரோல் பங்க உரிமையாளர் நடராஜன் வரவேற்று பேசினார். விழாவில் ஸ்ரீ லட்சுமி ஏஜென்சீஸ் தங்கராஜ், சுப்ரீம் பேரடைஸ் ராதா ஆகியோர் பேசினார்கள். இதைதொடர்ந்து 28 அதிர்ஷ்டசாலிகளுக்கும் கோவை இண்டியன் ஆயில் கார்போரேசன் முதன்மை டிவிசனல் சில்லறை விற்பனை பிரிவு மேலாளர் சரத்குமார் மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். முடிவில் பகவதி ஏஜென்சீஸ் தனசேகர் நன்றி கூறினார்.விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
குலுக்கல் முறையி தேர்வுசெய்யப்பட்ட அதிர்ஷ்டசாலி களுக்கு கோவை இண்டியன் ஆயில் கார்போரேசன் முதன்மை டிவிசனல் சில்லறை விற்பனை பிரிவு மேலாளர் சரத்குமார் மோட்டார் சைக்கிள்களை வழங்கியா போது எடுத்த படம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் நேற்று அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மாவட்ட...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
0 comments:
Post a Comment