Wednesday, November 12, 2014

வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (12–ந்தேதி) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தொழிற்சங்க தலைவர்கள் நவரத்தின பாண்டி, ராஜாராம், ராமநாதன் ஆகியோர் இன்று கூட்டாக மதுரையில் நிருபர்களிடம் ,
ஊதிய உயர்வு சம்பந்தமாக நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல வருடங்களாக போராடி வருகிறோம். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் 11 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊழியர்களின் பற்றாக்குறை, புதிய கிளைகள் தொடக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வங்கி ஊழியர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 12–ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளோம்.இதேபோல் அடுத்த மாதம் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் மண்டல அளவில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதுரையில் 500–க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இதில் வேலை பார்க்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி நாளை (11–ந்தேதி) தல்லாகுளத்தில் வங்கி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் 12–ந்தேதி மதுரை ரெயில் நிலையம் எதிரே வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment