Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூரில் லாரி திருடிய 2 பேர் சிக்கினர்                           கரூர் அருகே லாரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து லாரியை மீட்டனர்.

கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் டெர்மினல் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 11ம் தேதி பெரம்பலுர் கண்ணபாடியை சேர்ந்த டிரைவர் நாகராஜன்(33) என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது மர்மநபர்கள் லாரியை திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து நாகராஜன் வாங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் மதுரை சிவமுருகன்(22), தேனி தங்கபாண்டி ஆகியோர் லாரியை திருடியது தெரிய வந்தது .இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் லாரியை மீட்டனர். மேலும் இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

0 comments: