Sunday, November 23, 2014
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் அபுசாலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சாதிக் வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் கோவை சாதிக் பேசினார். மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், வடக்கு, தெற்கு பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், மாநகர பகுதிகளில் த.மு.மு.க.வின் சார்பில் டிசம்பர் 6–ந்தேதி காலை 10–30 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. டிசம்பர் 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை பாபர் மசூதியை கட்டித்தரக்கோரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் தபால் கார்டுகள் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, லிம்ரன் கமிஷன் பரிந்துரை செய்த பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகள் 67 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment