Sunday, November 23, 2014
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் அபுசாலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சாதிக் வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் கோவை சாதிக் பேசினார். மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், வடக்கு, தெற்கு பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், மாநகர பகுதிகளில் த.மு.மு.க.வின் சார்பில் டிசம்பர் 6–ந்தேதி காலை 10–30 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. டிசம்பர் 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை பாபர் மசூதியை கட்டித்தரக்கோரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் தபால் கார்டுகள் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, லிம்ரன் கமிஷன் பரிந்துரை செய்த பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகள் 67 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment