Sunday, November 23, 2014
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் அபுசாலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சாதிக் வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் கோவை சாதிக் பேசினார். மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், வடக்கு, தெற்கு பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், மாநகர பகுதிகளில் த.மு.மு.க.வின் சார்பில் டிசம்பர் 6–ந்தேதி காலை 10–30 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. டிசம்பர் 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை பாபர் மசூதியை கட்டித்தரக்கோரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் தபால் கார்டுகள் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, லிம்ரன் கமிஷன் பரிந்துரை செய்த பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகள் 67 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...

0 comments:
Post a Comment