Sunday, November 23, 2014
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் அபுசாலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சாதிக் வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் கோவை சாதிக் பேசினார். மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், வடக்கு, தெற்கு பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், மாநகர பகுதிகளில் த.மு.மு.க.வின் சார்பில் டிசம்பர் 6–ந்தேதி காலை 10–30 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. டிசம்பர் 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை பாபர் மசூதியை கட்டித்தரக்கோரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் தபால் கார்டுகள் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, லிம்ரன் கமிஷன் பரிந்துரை செய்த பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகள் 67 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...

0 comments:
Post a Comment