Sunday, November 23, 2014
சுல்தான்பேட்டை பகுதியில் தென்னை மரங்களில் காய் பிடிப்பு திறன் அதிகரித்துள்ளது.
15 லட்சம் தென்னை மரங்கள்
சுல்தான்பேட்டை ஒன்றி யத்தில் சுமார் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்கள் வளர்ப் புக்கு முக்கிய தேவையாக தண் ணீர் உள்ளது. ஆனால் சுல்தான்பேட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை வளம் இல்லாத தால் கடும் வறட்சி நிலவி வந்தது.
வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தென்னை மரங்கள் ஒவ்வொன்றாக கருக தொடங்கின. சுமார் 50 ஆயிரம் மரங்கள் கருகின. ஆயிரக்கணக்கான தென்னை கள் காய்ப்பு திறனை முற்றி லுமாக இழந்தன. இதனால் தென்னை விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
காய் பிடிப்பு திறன்அதிகரிப்பு
மேலும் வறட்சி காரணமாக தென்னை மரங்களில் காய்கள் விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. விளைச்சல் குறைந்ததால் வெளி மார்க் கெட்டில் தேங்காய், கொப் பரை, இளநீர் விலை கிடு,கிடு என உயர்ந்தது. இது தென்னை விவசாயிகளின் மனதை சற்று குளிரச் செய்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சுல்தான் பேட்டை பகுதியில் அவ்வப் போது கனமழையும், சாரல் மழையும் பெய்தது. இதன் காரணமாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இருந்த தென்னை மரங்கள் படிப்படி யாக பசுமையாக மாறத் தொடங்கின. மேலும் தென்னை மரங்களில் காய் பிடிப்பு திறன் அதிகரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உரமிடும் பணி
மேலும் கடந்த பருவத்தை விட தற்போதைய பருவத்தில் மிக அதிக எண்ணிக்கையில் தேங்காய், இளநீர் விவசாயி களுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருவாய் அதிகரிக்கும் நிலை உள்ளதால் தற்போது சுல்தான் பேட்டை வட்டாரத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பலர் பல மாதங்களுக்கு பின்னர் மரங்களை ஆர்வமுடன் பராமரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
மேலும் தேங்காய், இளநீர் விளைச்சல் அமோகமாக இருக்க மரங்களின் வேர் பகுதியில் உரமிடும் பணியை யும் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
0 comments:
Post a Comment