Sunday, November 23, 2014
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர் கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
காற்றாலைகள்
சுல்தான்பேட்டை, வதம்பச் சேரி, செலக்கரச்சல், அப்ப நாயக்கன்பட்டி, காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி, சந்திராபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40–க்கும் மேற்பட்ட காற்றலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் ஒவ்வொன்றும் ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக சுல்தான்பேட்டை வட்டார பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காற்றாலைகள் அமைக்கப் பட்டு இருந்த நிலங்களில் தண் ணீர் தேங்கி கடும் ஈரப்பதத்தை ஏற்படுத்தியது. இதனால் புதிதாக காற்றாலைகள் அமைப்பதற் கான இறக்கைகள் மற்றும் பிற உபகரணங்களை கனரக வாகனங்கள் மூலம் அமைவிடத்திற்கு எடுத்து செல்ல முடியாத அளவுக்கு ஈரப்பதம் இருந்தது.
மீண்டும் பணி தொடக்கம்
இதன் எதிரொலியாக ஒரு மாதமாக சுல்தான் பேட்டை பகுதியில் புதிதாக காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. மேலும் பழுதடைந்த இறக்கைக்கு பதில் புதிய இறக்கை மாற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்க வில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது மழை நின்று, வெயில் அடிக்கிறது. இதனால் காற்றாலை அமைக்கப்படும் இடங்களில் மண்ணில் இருந்த ஈரப்பதம் நன்கு காய்ந்து விட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் புதிதாக காற்றாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இத னால் தற்காலிகமாக வேலை வாய்ப்பு இழந்து இருந்த நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...

0 comments:
Post a Comment