Sunday, November 23, 2014
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர் கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
காற்றாலைகள்
சுல்தான்பேட்டை, வதம்பச் சேரி, செலக்கரச்சல், அப்ப நாயக்கன்பட்டி, காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி, சந்திராபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40–க்கும் மேற்பட்ட காற்றலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் ஒவ்வொன்றும் ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக சுல்தான்பேட்டை வட்டார பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காற்றாலைகள் அமைக்கப் பட்டு இருந்த நிலங்களில் தண் ணீர் தேங்கி கடும் ஈரப்பதத்தை ஏற்படுத்தியது. இதனால் புதிதாக காற்றாலைகள் அமைப்பதற் கான இறக்கைகள் மற்றும் பிற உபகரணங்களை கனரக வாகனங்கள் மூலம் அமைவிடத்திற்கு எடுத்து செல்ல முடியாத அளவுக்கு ஈரப்பதம் இருந்தது.
மீண்டும் பணி தொடக்கம்
இதன் எதிரொலியாக ஒரு மாதமாக சுல்தான் பேட்டை பகுதியில் புதிதாக காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. மேலும் பழுதடைந்த இறக்கைக்கு பதில் புதிய இறக்கை மாற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்க வில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது மழை நின்று, வெயில் அடிக்கிறது. இதனால் காற்றாலை அமைக்கப்படும் இடங்களில் மண்ணில் இருந்த ஈரப்பதம் நன்கு காய்ந்து விட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் புதிதாக காற்றாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இத னால் தற்காலிகமாக வேலை வாய்ப்பு இழந்து இருந்த நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment