Sunday, November 23, 2014
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர் கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
காற்றாலைகள்
சுல்தான்பேட்டை, வதம்பச் சேரி, செலக்கரச்சல், அப்ப நாயக்கன்பட்டி, காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி, சந்திராபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40–க்கும் மேற்பட்ட காற்றலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் ஒவ்வொன்றும் ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக சுல்தான்பேட்டை வட்டார பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காற்றாலைகள் அமைக்கப் பட்டு இருந்த நிலங்களில் தண் ணீர் தேங்கி கடும் ஈரப்பதத்தை ஏற்படுத்தியது. இதனால் புதிதாக காற்றாலைகள் அமைப்பதற் கான இறக்கைகள் மற்றும் பிற உபகரணங்களை கனரக வாகனங்கள் மூலம் அமைவிடத்திற்கு எடுத்து செல்ல முடியாத அளவுக்கு ஈரப்பதம் இருந்தது.
மீண்டும் பணி தொடக்கம்
இதன் எதிரொலியாக ஒரு மாதமாக சுல்தான் பேட்டை பகுதியில் புதிதாக காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. மேலும் பழுதடைந்த இறக்கைக்கு பதில் புதிய இறக்கை மாற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்க வில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது மழை நின்று, வெயில் அடிக்கிறது. இதனால் காற்றாலை அமைக்கப்படும் இடங்களில் மண்ணில் இருந்த ஈரப்பதம் நன்கு காய்ந்து விட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் புதிதாக காற்றாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இத னால் தற்காலிகமாக வேலை வாய்ப்பு இழந்து இருந்த நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment