Sunday, November 23, 2014
திருப்பூரில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றமற்ற நகரமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் ‘மூன்றாம் கண்’ கண்காணிப்பு கேமரா திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ரூ.18 லட்சம் செலவில் 50 கேமராக்கள் ஷெரீப்காலனி, குறிஞ்சிநகர், அரண்மனைபுதூர், நகர விரிவாக்கப்பகுதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் தொடக்கவிழா ஸ்ரீபுரம் அறக்கட்டளை அலுவலகம் அருகில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம் வரவேற்றார்.
‘மூன்றாம் கண்’ திட்டம் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் சேஷசாய் பேசும்போது கூறியதாவது:–
திருப்பூர் தொழில் துறையினரின் சமூக நல ஆர்வத்தை பார்க்கையில் பெருமையாக உள்ளது. திருப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதல் கட்டமாக 50 கேமராக்களை அமைத்துள்ளனர். லண்டன் நகரில் மக்களின் பாதுகாப்பிற்காக 5 லட்சம் கேமராக்களை அமைத்துள்ளனர். திருப்பூரின் பாதுகாப்பிற்காக விரைவில் 60 வார்டுகளிலும் 1,500 கேமராக்களை அமைக்க திருப்பூர் தொழில் துறையினர் உறுதி அளித்துள்ளனர். இது மிகவும் நல்ல பணி. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2 சக்கர வாகனத்திருட்டு போன்ற பிரச்னைகள் இதன் மூலம் குறையும். கேமரா வைக்கப்பட்டுள்ளே என்பதற்காக பெண்கள் அதிக நகைகளை அணிந்து செல்ல வேண்டாம். பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் அவர்கள் இருக்க வேண்டும். இந்த திட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மூன்றாம் கண்’ கேமரா திட்டத்தை தொடங்கி வைத்து தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசியதாவது:–
மக்களை பாதுகாக்கும் திட்டங்கள் இன்று திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினரின் உழைப்பும், ஆர்வமும் உள்ளது. இந்தியாவில் முதல் முயற்சியாக தமிழகத்தில் திருப்பூரில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். தாமாக முன்வந்து இந்த பணியை மேற்கொண்டுள்ள திருப்பூர் தொழில் துறையினரை பாராட்டுகிறேன்.
திருப்பூர் நகரில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றமற்ற நகரமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக 50 கேமராக்களை அமைத்துள்ளனர். விரைவில் திருப்பூரில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, குற்றமில்லா நகரமாக திருப்பூரை மாற்றியமைக்க அரசு தரப்பில் இருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுத்தருவேன்.
வெளிநாட்டு இறக்குமதி வர்த்தகர்கள் திருப்பூருக்கு சென்றால் அச்சம் இல்லாமல் பின்னலாடை வர்த்தகம் செய்யலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அரசு தரப்பும், பொதுமக்கள் தரப்பும், தொழில் துறையினர் தரப்பும் இணைந்து நல்ல பல திட்டங்களை திருப்பூரில் உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஸ்ரீபுரம் அறக்கட்டளை குழுவினருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், துணை காவல் ஆணையர் திருநாவுக்கரசு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீபுரம் அறக்கட்டளை அறங்காவலர் யாஸ்கணேஷ் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை உறுப்பினர் வார்ஷா ராமு பேசுகையில், முதல் கட்டமாக 50 கேமராக்களை அமைத்துள்ளோம். விரைவில் தென்னம்பாளையம், பெரிச்சிபாளையம், டி.ஆர்.கே நகர், எம்.ஆர். நகர், அமர்ஜோதி கார்டன், கே.பி.என். காலனி, 15வேலம்பாளையம் ஆகிய இடங்களில் 45 முதல் 60 நாட்களுக்குள் 250 கேமராக்களை அமைக்க அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘நவீன கேமராக்களை இறக்குமதி செய்யும்போது வரிச்சலுகை வழங்கினால் மேலும் பல கேமராக்களை வாங்க முடியும். இதற்கு அரசு சார்பில் வரிச்சலுகை வழங்கினால் நன்றாக இருக்கும்’ என்று விழா மேடையிலேயே அமைச்சர் ஆனந்தனிடமும், கலெக்டர் கோவிந்தராஜிடமும் கோரிக்கை விடுத்தார். உடனே மேடையிலேயே இதற்கு ஆவண செய்யப்படும் என்று இருவரும் ஒப்புதல் அளித்தவுடன் கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...

0 comments:
Post a Comment