Sunday, November 23, 2014
திருப்பூரில் அடிக்கடி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏழு பாலங்களை உயர்த்திக் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள வெள்ளியங்காடு வட்டாரத்தில் நாவிதன் தோட்டம், கணேஷ்நகர், வெள்ளியங்காடு முதல் வீதி, வெள்ளியங்காடு 2வது வீதி, வெள்ளியங்காடு 3வது வீதி, முத்தையன் நகர், முத்தையன் கோயில் மெயின் ரோடு ஆகிய பகுதிகளை இணைக்கக் கூடிய பாலங்கள் மழைக் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போதும், கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது இந்த பாலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மேற்கண்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவுகளைப் போல் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பாலங்கள் உடைந்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மிகப்பெரும் சேதம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த பகுதிகளை இணைக்கும் பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பாலங்களை உயர்த்திக் கட்டுவதை விட்டு விட்டு தற்காலிக மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன. எனவே பல்லாயிரம் மக்கள் வசிக்கும் மேற்கண்ட பகுதிகளில் இணைப்புப் பாலங்களை உயர்த்திக் கட்ட தமிழக அரசும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று (நவ.23) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் வெள்ளியங்காடு பகுதி கிளைகளின் செயலாளர்கள் கே.பொம்முதுரை, சந்திரசேகர், மாரிமுத்து மற்றும் தென்னம்பாளையம் கிளைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஏறத்தாழ நாற்பது பேர் பங்கேற்று வீடு, வீடாக மக்களைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறி கையெழுத்துப் பெற்றனர். இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
மக்களிடம் கையெழுத்துப் பெற்ற படிவங்களை தொகுத்து அரசுக்கு அனுப்பவும், இனியும் நடவடிக்கை எடுக்காமல் அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தினால் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. வெள்ளியங்காடு பகுதியில் பாலங்களை உயர்த்திக் கட்ட வலியுறுத்தி பொது மக்களிடம் ஞாயிறன்று கையெழுத்துப் பெறும் மார்க்சிஸ்ட் கட்சியினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment