Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
மதுரை பகுதியில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதி
மதுரை பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் ராம்நாட் டி.ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் முத்தனசாமி, பொதுச்செயலாளர் குமாரலிங்கம், துணை தலைவர் எம்.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை தலைவர் அய்யனார் வரவேற்றார். மண்டல பொதுச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அவனியாபுரம் காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவனியாபுரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.
வார்டு எண்: 55, 56, 58, 59, 60, 61, 62 ஆகிய அனைத்து வார்டுகளில் விரிவாக்க பகுதிகளில் முறையான தார் சாலை மற்றும் மின்விளக்கு அமைக்க வேண்டும். முறையாக ரேஷன் பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை கட்டிடத்தில் இயங்குகின்ற அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளினால் இரவில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இரண்டு மதுபான கடைகளையும் வேறு இடங்களில் மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளதால் நாய்களை ஒழிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments: