Thursday, November 27, 2014
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டியதில் ரூ.16
ஆயிரம் கோடி கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம்
அரசுக்கு அளித்த அறிக்கை அடிப்படையில் மதுரை மேலூர் பகுதியில் உள்ள
கிரானைட் குவாரிகளில் 2011–ம் ஆண்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முறைகேடுகள் நடந்ததாக 86 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தி குவாரிகளில் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து மதிப்பீடு செய்தனர்.
கிரானைட் மோசடி குறித்து 90–க்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டில் அதிக வழக்குகளில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்களை வங்கி கடனுக்காக ஏலம் விடப்படும் நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் கிரானைட் முறைகேட்டில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட கிரானைட் கற்களை மதிப்பீடு செய்ததில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு கிரானைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 86 கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க, மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வருகிற 3–ந்தேதி முதல் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் குவாரி உரிமையாளர்களிடம் உடனடியாக அபராத தொகையை அறிவிக்க, கலெக்டர் முடிவு செய்துள்ளார். அந்த தொகையை அவர்கள் மீதான வழக்கு முடியும் தருவாயில் கனிம வளத்துறை வசூல் செய்யும்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மதுரை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் முறைகேடுகள் நடந்ததாக 86 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தி குவாரிகளில் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து மதிப்பீடு செய்தனர்.
கிரானைட் மோசடி குறித்து 90–க்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டில் அதிக வழக்குகளில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்களை வங்கி கடனுக்காக ஏலம் விடப்படும் நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் கிரானைட் முறைகேட்டில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட கிரானைட் கற்களை மதிப்பீடு செய்ததில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு கிரானைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 86 கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க, மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வருகிற 3–ந்தேதி முதல் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் குவாரி உரிமையாளர்களிடம் உடனடியாக அபராத தொகையை அறிவிக்க, கலெக்டர் முடிவு செய்துள்ளார். அந்த தொகையை அவர்கள் மீதான வழக்கு முடியும் தருவாயில் கனிம வளத்துறை வசூல் செய்யும்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மதுரை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
வாஸன் கண் மருத்துவமனை டாக்டர் ஷிபு வர்கி அவர்கள் கண் ந் p றம் மாற்று அறுவை சிகிச்சை சரிசெய்யும் முறையில் பிரபல பாடகர் ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment