Thursday, November 27, 2014
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டியதில் ரூ.16
ஆயிரம் கோடி கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம்
அரசுக்கு அளித்த அறிக்கை அடிப்படையில் மதுரை மேலூர் பகுதியில் உள்ள
கிரானைட் குவாரிகளில் 2011–ம் ஆண்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முறைகேடுகள் நடந்ததாக 86 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தி குவாரிகளில் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து மதிப்பீடு செய்தனர்.
கிரானைட் மோசடி குறித்து 90–க்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டில் அதிக வழக்குகளில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்களை வங்கி கடனுக்காக ஏலம் விடப்படும் நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் கிரானைட் முறைகேட்டில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட கிரானைட் கற்களை மதிப்பீடு செய்ததில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு கிரானைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 86 கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க, மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வருகிற 3–ந்தேதி முதல் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் குவாரி உரிமையாளர்களிடம் உடனடியாக அபராத தொகையை அறிவிக்க, கலெக்டர் முடிவு செய்துள்ளார். அந்த தொகையை அவர்கள் மீதான வழக்கு முடியும் தருவாயில் கனிம வளத்துறை வசூல் செய்யும்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மதுரை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment