Thursday, November 27, 2014

இதில் முறைகேடுகள் நடந்ததாக 86 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தி குவாரிகளில் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து மதிப்பீடு செய்தனர்.
கிரானைட் மோசடி குறித்து 90–க்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டில் அதிக வழக்குகளில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்களை வங்கி கடனுக்காக ஏலம் விடப்படும் நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் கிரானைட் முறைகேட்டில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட கிரானைட் கற்களை மதிப்பீடு செய்ததில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு கிரானைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 86 கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க, மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வருகிற 3–ந்தேதி முதல் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் குவாரி உரிமையாளர்களிடம் உடனடியாக அபராத தொகையை அறிவிக்க, கலெக்டர் முடிவு செய்துள்ளார். அந்த தொகையை அவர்கள் மீதான வழக்கு முடியும் தருவாயில் கனிம வளத்துறை வசூல் செய்யும்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மதுரை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment