Thursday, November 06, 2014
நெடுஞ்சாலை போலீஸார் நியமனத்தில் குளறுபடி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்து அசம்பாவிதம் போன்றவற்றை தடுக்கும் வகையில், போக்குவரத்து ரோந்து பிரிவு (ஹைவே பேட்ரோல்) போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து பிரிவில், ஒரு எஸ்.ஐ., ஒரு ஏட்டு, ஒரு முதல்நிலை காவலர், ஜீப் டிரைவர் என நால்வர் பணியில் இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஐந்து இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, சுழற்சி முறையில் நியமிக்கப்படுவது வழக்கம். இதில், சீனியாரிட்டி போலீஸாரை முதலில் நியமிக்கின்றனர். இவர்கள், ஆறு மாதம் வரை தான் பணிபுரிய முடியும். அடுத்து, இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், சிலர் கலெக்ஷனுக்காக, அதே பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். போக்குவரத்து பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மற்ற போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment