Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
 நெடுஞ்சாலை போலீஸார் நியமனத்தில் குளறுபடி                                                                                                                                                                                                                                                                     தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்து அசம்பாவிதம் போன்றவற்றை தடுக்கும் வகையில், போக்குவரத்து ரோந்து பிரிவு (ஹைவே பேட்ரோல்) போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து பிரிவில், ஒரு எஸ்.ஐ., ஒரு ஏட்டு, ஒரு முதல்நிலை காவலர், ஜீப் டிரைவர் என நால்வர் பணியில் இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஐந்து இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, சுழற்சி முறையில் நியமிக்கப்படுவது வழக்கம். இதில், சீனியாரிட்டி போலீஸாரை முதலில் நியமிக்கின்றனர். இவர்கள், ஆறு மாதம் வரை தான் பணிபுரிய முடியும். அடுத்து, இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், சிலர் கலெக்ஷனுக்காக, அதே பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். போக்குவரத்து பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மற்ற போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: