Thursday, November 06, 2014
நெடுஞ்சாலை போலீஸார் நியமனத்தில் குளறுபடி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்து அசம்பாவிதம் போன்றவற்றை தடுக்கும் வகையில், போக்குவரத்து ரோந்து பிரிவு (ஹைவே பேட்ரோல்) போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து பிரிவில், ஒரு எஸ்.ஐ., ஒரு ஏட்டு, ஒரு முதல்நிலை காவலர், ஜீப் டிரைவர் என நால்வர் பணியில் இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஐந்து இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, சுழற்சி முறையில் நியமிக்கப்படுவது வழக்கம். இதில், சீனியாரிட்டி போலீஸாரை முதலில் நியமிக்கின்றனர். இவர்கள், ஆறு மாதம் வரை தான் பணிபுரிய முடியும். அடுத்து, இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், சிலர் கலெக்ஷனுக்காக, அதே பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். போக்குவரத்து பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மற்ற போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment