Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
 

கரூரில்அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கக் கூட்டம்                                                    தமிழ்நாடு அண்ணல்காந்தி ஓட்டுனர் நடத்துனர், கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் சுப்புராமன் பேசினார். மனோகரன், ராமச்சந்திரன், துரைராஜ், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில், ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடத்துவது, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற உறுப்பினர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும். 
ஓட்டுனர், நடத்துனர்கள் பணியில் இருக்கும்போது அவசியம் வாகனத்தின் ஆவணங்களையும் ஓட்டுனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும். டிரிப் ஷீட் மிக கவனமாக பராமரிக்க வேண்டும். ஓட்டுனர் நடத்துனர் மோட்டார் வாகன சட்டத்தை மதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுரைகளை ஏற்று வாகனங்களை இயக்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

0 comments: