Thursday, November 06, 2014
எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ரூ24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதியாம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், எழுதியாம்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செக்கணத்தில் எம்பி தொகுதி நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய சமுதாய கூடம், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி பாம்பரத்தான்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். திருக்காம்புலியூர் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி தலைவர் கல்யாணி, ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிடங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்து பேசினார். தொகுதி இணை செயலாளர் ராஜா, ஒன்றிய பேரவை செயலாளர் மணவாசி வீரமணி, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய மேற்பார்வையாளர் விமலா, கண்காணிப்பாளர் ரேணுகா, கிளை செயலாளர்கள் பெருமாள், மலையாளன், குணா, குமரவேல், ஊர் நாட்டாண்மை கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment