Thursday, November 06, 2014
எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ரூ24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதியாம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், எழுதியாம்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செக்கணத்தில் எம்பி தொகுதி நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய சமுதாய கூடம், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி பாம்பரத்தான்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். திருக்காம்புலியூர் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி தலைவர் கல்யாணி, ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிடங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்து பேசினார். தொகுதி இணை செயலாளர் ராஜா, ஒன்றிய பேரவை செயலாளர் மணவாசி வீரமணி, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய மேற்பார்வையாளர் விமலா, கண்காணிப்பாளர் ரேணுகா, கிளை செயலாளர்கள் பெருமாள், மலையாளன், குணா, குமரவேல், ஊர் நாட்டாண்மை கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment