Thursday, November 06, 2014
வரவணை பகுதியில் குவாரியில் வெடித்த கற்கள் விவசாய நிலத்தில் விழுந்தது குளித்தலை ஆர்டிஓ ஆய்வு கடவூர் தாலுகா வரவணை பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கல் பறந்து விவசாய நிலத்தில் விழுந்ததால் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
கடவூர் தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வரவணை ஊராட்சியில் அதிக படியான குவாரிகள் உரிய அனுமதியோடும் மற்றும் அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் வரவணை அருகில் உள்ள தனியார் கல் குவாரியில் திடீர் என்று நில அதிர்வு போன்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. பின்னர் அதில் இருந்து பறந்த கற்கள் விவசாய பகுதியில் போய் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என குவாரியை முற்றுகையிட்டனர்.அதன் பின்னர் நேற்று குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சித்திரைராஜ், மாவட்ட கனிம வள சுரங்கத்துறை புள்ளியியல் உதவி இயக்குனர் ஜெயபால், கடவூர் தாசில்தார் துரையரசன் ஆகியோர் குவாரியை ஆய்வு செய்தனர். இதில் அருகருகே உள்ள மூன்று குவாரிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் உரிய ஆவணங்கள் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் புகார் மனு ஒன்றையும் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சித்திரைராஜிடம் வழங்கினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment