Thursday, November 06, 2014
வரவணை பகுதியில் குவாரியில் வெடித்த கற்கள் விவசாய நிலத்தில் விழுந்தது குளித்தலை ஆர்டிஓ ஆய்வு கடவூர் தாலுகா வரவணை பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கல் பறந்து விவசாய நிலத்தில் விழுந்ததால் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
கடவூர் தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வரவணை ஊராட்சியில் அதிக படியான குவாரிகள் உரிய அனுமதியோடும் மற்றும் அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் வரவணை அருகில் உள்ள தனியார் கல் குவாரியில் திடீர் என்று நில அதிர்வு போன்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. பின்னர் அதில் இருந்து பறந்த கற்கள் விவசாய பகுதியில் போய் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என குவாரியை முற்றுகையிட்டனர்.அதன் பின்னர் நேற்று குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சித்திரைராஜ், மாவட்ட கனிம வள சுரங்கத்துறை புள்ளியியல் உதவி இயக்குனர் ஜெயபால், கடவூர் தாசில்தார் துரையரசன் ஆகியோர் குவாரியை ஆய்வு செய்தனர். இதில் அருகருகே உள்ள மூன்று குவாரிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் உரிய ஆவணங்கள் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் புகார் மனு ஒன்றையும் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சித்திரைராஜிடம் வழங்கினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment