Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

 ராமேஸ்வரம் மீனவர் 5 பேருக்கு தூக்குதண்டனை எதிர்த்துகரூரில் வக்கீல்கள்  ஆர்ப்பாட்டம்                   ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை உடனே விடுவிக்க கோரியும், கரூர் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற வாயில் முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 5 தமிழக மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். வக்கீல்கள் ஜெகநாதன், ராஜேந்திரன், ராஜா, லட்சுமணன், மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

0 comments: