Thursday, November 06, 2014
கரூரில் வங்கி மேலாளர்களுக்குஒருநாள் கருத்துப்பட்டறை 
கரூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் குறித்து ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெற்றது.நிதியியல் உள்ளாக்கம், நிதியியல் கல்வியறிவு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளை மேலாளர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் ஒரு நாள் கருத்துப்பட்டறையை கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்து பேசியதாவது:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2011ல் துவக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களில் புதுவாழ்வு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மற்றும் குளித்தலை வட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதுவாழ்வு திட்டத்துடன் இணைந்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்தில் நன்றாக செயல்படுகிறது. அரசு வழங்கும் திட்டங்கள் வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து உதவிடும் வகையில் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்த்திட வேண்டும். அதனடிப்படையில் கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசுத்துறைகள் வழங்கும் நிதியினை முறையாக ஏழை மக்களுக்கு வங்கிகள் மூலம் சென்றடையவும், இலக்கு மக்களை ஒருங்கிணைத்து நிலைத்த மற்றும் நீடித்த தன்மையுடைய வலுவான மக்கள் அமைப்புகளான சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒரே தொழில் செய்யும் கூட்டமைப்புகளுக்கு நிதி வழங்கிட இந்த கருத்துப்பட்டறை நடைபெறுகிறது. இதன் நோக்கம் புதுவாழ்வு மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என அனைவரும் இணைந்து தகவல் பரிமாற்றம் செய்து இலக்கை சரியாக அடைவது மட்டுமின்றி விவசாயம், தொழில் என கலாசாரத்திற்கு ஏற்றவாறு உதவ வேண்டும் என்பதாகும். இந்த கருத்துப்பட்டறையில் அனைவரும் கலந்தாலோசித்து முழு ஒத்துழைப்பை வழங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் முகமது சகாப்தீன், புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல், உதவி திட்ட இயக்குநர்கள் லட்சுமணன், விஜயகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், மாவட்ட வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் தமயந்தி, லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் (ஓய்வு) ராமச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் (நுண்நிதி) முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment