Monday, December 01, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., பொங்கலூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் அவினாசிபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் .எஸ்.சிவாச்சலம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டம் கட்சி ரீதியாக 3 அமைப்புகளாக செயல்பட்டு வந்தது. இதுவரை புறநகர் மாவட்டத்தில் இருந்த பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க.இயக்கம் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றியை தந்துள்ளது.
அந்த வகையில் வருகின்ற காலத்தில், பல்லடம் தொகுதி இணைக்கப்பட்டுள்ள மாநகர் மாவட்ட கழகம் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும்; நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெற்று வெற்றியை ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா அவர்களின் எக்கு கோட்டையாக உள்ளது. மாநில அளவில் கடந்த தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக அளவில் முதல் இடத்திலும், பல்லடம் தொகுதி இரண்டாவது இடத்திலுமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இனிமேலும் நமக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் வருகிற தேர்தல்களிலும் வெற்றிக்கனியை பறித்து அம்மா அவர்ளின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொங்கலூர் தொகுதியாக இருந்தபோது முதல் எம்.எல்.ஏ.வாக அண்ணா தி.மு.க.இயக்கம் உறுப்பினர்தான் வெற்றி பெற்றார். இப்பகுதிகளில் பல்வே று வெற்றிகள் நம் இயக்க தொண்டர்களால் பெற்று இருக்கிறோம்.எனவே,வருகிற காலத்திலும் மாநகர் மாவட்டத்துடன் இணைந்து வெற்றிகளை பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், .ஊராட்சி தலைவர்கள் யு.எஸ்.பழனிசாமி, கரைபுதூர் நடராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், எம்.மணி, ஸ்டீபன் ராஜ், தொகுதி செயலாளர் லோகநாதன் மற்றும் பொங்கலூர் ஒன்றியம், திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் அடுத்துள்ள பொங்கலூரில் நடந்த மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
திருப்பூர் மாவட்டம் கட்சி ரீதியாக 3 அமைப்புகளாக செயல்பட்டு வந்தது. இதுவரை புறநகர் மாவட்டத்தில் இருந்த பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க.இயக்கம் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றியை தந்துள்ளது.
அந்த வகையில் வருகின்ற காலத்தில், பல்லடம் தொகுதி இணைக்கப்பட்டுள்ள மாநகர் மாவட்ட கழகம் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும்; நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெற்று வெற்றியை ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா அவர்களின் எக்கு கோட்டையாக உள்ளது. மாநில அளவில் கடந்த தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக அளவில் முதல் இடத்திலும், பல்லடம் தொகுதி இரண்டாவது இடத்திலுமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இனிமேலும் நமக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் வருகிற தேர்தல்களிலும் வெற்றிக்கனியை பறித்து அம்மா அவர்ளின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொங்கலூர் தொகுதியாக இருந்தபோது முதல் எம்.எல்.ஏ.வாக அண்ணா தி.மு.க.இயக்கம் உறுப்பினர்தான் வெற்றி பெற்றார். இப்பகுதிகளில் பல்வே
கூட்டத்தில் பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், .ஊராட்சி தலைவர்கள் யு.எஸ்.பழனிசாமி, கரைபுதூர் நடராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், எம்.மணி, ஸ்டீபன் ராஜ், தொகுதி செயலாளர் லோகநாதன் மற்றும் பொங்கலூர் ஒன்றியம், திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் அடுத்துள்ள பொங்கலூரில் நடந்த மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment