Thursday, December 04, 2014
திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டு கவிதா லட்சுமி நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி சமையலறை மற்றும் தண்ணீர் தொட்டிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் கவிதா லட்சுமி நகர், 15வேலம்பாளையம் நகராட்சியாக செயல்பட்டபோது பெரியார் காலனியில் உள்ள துவக்கப்பள்ளியில் இருந்து கடந்த 2003ம் ஆண்டு பிரித்து சாதாரண ஓலை குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி வேலம்பாளையம் நகராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் 6வது வார்டாக மாற்றப்பட்டு கடந்த 2010-11ம் ஆண்டு கட்டிடமாக கட்டப்பட்டது. இதில் 16 குழந்தைகள் மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்களுடன் 115 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர்..
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் சுகாதார வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன சத்துணவு கூடம் அமைக்க உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் இந்த பள்ளிக்கூடம் கடந்த 3 ஆண்டில் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சுகாதரமான முறையில் சத்துணவுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக அணைத்து வசதிகளும் இந்த பள்ளியில் அமைக்கப்பட்டு இப்பள்ளி திகழ்கிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் முதன்மையாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
மேலும் இப்பள்ளிக்கு மெருகூட்டும் வகையில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து நவீன சமையல் அறை கட்டுவதற்கு ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிந்துரை செய்தார். மேலும் தரை மட்ட தண்ணீர் தொட்டி கட்ட மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்த இரு பணிகளும் முடிக்கப்பட்டு இதன் திறப்பு விழா பள்ளியில் நடைபெற்றது.புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் வி. ராதாகிருஷ்ணன், ஜெ.ஜான்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் வி.கே.பி.மணி மற்றும் எம்.மணி, நகர சீரமைப்பு குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் சத்யா, கல்பனா, ஈஸ்வரன், திலகர்நகர் சுப்பு, சின்னசாமி,செந்தில்குமார், மற் றும் அண்ணா தி,மு,க,நிர்வாகிகள் ஈஸ்வரன், ஸ்டீபன்ராஜ், டி.டி. பி.தேவராஜ், ஏ.எஸ்.கண்ணன், வி.எம்.கோகுல், நீதிராஜன்,மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரவி, மண்டல உதவி ஆணையாளர் சபியுல்லா, உதவி பொறியாளர், அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கற்பகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...



0 comments:
Post a Comment