Thursday, December 04, 2014
அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய முரண்பாடுகளைக் களைவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு முடிவுப்படி மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை அரசு ஊழியர்களின் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் தென்னம்பாளையம் காட்டுவளவு ஏஆர்எஸ் மருத்துவமனை முன்பிருந்து அரசு ஊழியர் ஊர்வலம் தொடங்கியது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செ.நடராசன் இந்த ஊர்வலத்துக்குத் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி சங்கக் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார். இதில் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் ஆர்.வி.இ. லே அவுட், செரீப் காலனி, தாராபுரம் சாலை, கே.எஸ்.சி.பள்ளி சாலை வழியாக அரிசிக்கடை வீதியை அடைந்தது. அங்கு கோரிக்கைகளை விளக்கி டி.சிவஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினார். நிறைவாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.
திருப்பூர் காட்டுவளவு ஏ.ஆர்.எஸ். மருத்துவமனை முன்பாக அரசு ஊழியர் சங்க ஊர்வலத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment