Thursday, December 04, 2014
அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய முரண்பாடுகளைக் களைவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு முடிவுப்படி மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை அரசு ஊழியர்களின் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் தென்னம்பாளையம் காட்டுவளவு ஏஆர்எஸ் மருத்துவமனை முன்பிருந்து அரசு ஊழியர் ஊர்வலம் தொடங்கியது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செ.நடராசன் இந்த ஊர்வலத்துக்குத் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி சங்கக் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார். இதில் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் ஆர்.வி.இ. லே அவுட், செரீப் காலனி, தாராபுரம் சாலை, கே.எஸ்.சி.பள்ளி சாலை வழியாக அரிசிக்கடை வீதியை அடைந்தது. அங்கு கோரிக்கைகளை விளக்கி டி.சிவஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினார். நிறைவாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.
திருப்பூர் காட்டுவளவு ஏ.ஆர்.எஸ். மருத்துவமனை முன்பாக அரசு ஊழியர் சங்க ஊர்வலத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment