Thursday, December 04, 2014
அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய முரண்பாடுகளைக் களைவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு முடிவுப்படி மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை அரசு ஊழியர்களின் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் தென்னம்பாளையம் காட்டுவளவு ஏஆர்எஸ் மருத்துவமனை முன்பிருந்து அரசு ஊழியர் ஊர்வலம் தொடங்கியது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செ.நடராசன் இந்த ஊர்வலத்துக்குத் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி சங்கக் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார். இதில் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் ஆர்.வி.இ. லே அவுட், செரீப் காலனி, தாராபுரம் சாலை, கே.எஸ்.சி.பள்ளி சாலை வழியாக அரிசிக்கடை வீதியை அடைந்தது. அங்கு கோரிக்கைகளை விளக்கி டி.சிவஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினார். நிறைவாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.
திருப்பூர் காட்டுவளவு ஏ.ஆர்.எஸ். மருத்துவமனை முன்பாக அரசு ஊழியர் சங்க ஊர்வலத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment