Thursday, December 04, 2014
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில் தெற்கு அவினாசிபாளையம், பொங்கலூர், மாதப்பூர் ஆகிய 3 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையால் இயங்கி வந்த இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அவரதுவழிகாட்டுதலின் பேரில், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ரூ.11.06 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில் தெற்கு அவினாசிபாளையம், பொங்கலூர், மாதப்பூர் ஆகிய 3 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையால்
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், மாமன்ற கவுன்சிலர் எம்.கண்ணப்பன், மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் எம்.மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், தண்ணீர் பந்தல் ப.நடராஜ் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், உகாயனூர் பழனிசாமி, திருப்பூர் கால்நடைத்துறை துணை இயக்குனர் டாக்டர்.சண்முகவேல், உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் ராமச்சந்திரன், பிரபாகரன்,கால்நடை உதவி மருத்துவர் ஜெகநாதன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் புத்தரச்சல் பாபு, சித்துராஜ், வி.எம்.கோகுல் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் நீதிராஜன், அர்ஜுனன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...


0 comments:
Post a Comment