Thursday, December 04, 2014
திருப்பூர் அடுத்துள்ள அவினாசியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவரது மனைவி தெய்வாத்தாள் (50). திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடராஜும், அவரது மனைவி தெய்வாத்தாளும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அனுப்பர்பாளையம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை நடராஜ் முந்திச்செல்ல முயன்றபோது நிலைதடுமாறி இருவரும் தண்ணீர் லாரியின் சக்கரத்திற்கு நடுவே விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் தெய்வாத்தாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். நடராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி நடராஜ் இறந்தார்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment