Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திருப்பூர் சார் டாக்டர் கே.செந்தில்ராஜ் திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பறவை காய்ச்சல் நோயினால் எந்த வித பறவைகளுக்கும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம், தாலுகா, ஊராட்சி அளவில் இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னாறு பகுதியில் கேரள மாநில எல்லை உள்ளது. அந்த பகுதியில் வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்வதற்கும், இந்த நோய் குறித்து கண்டறிவதற்கும் காவல்துறை, சிறப்பு நோய் தடுப்புக் குழு ஆகியவற்றால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ணைகளை சுற்றிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு கிருமி நாசினி மருந்து போன்றவற்றை தெளிக்க ஏற்பாடு செய்து இந்த நோய் வராமல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோழிகளை 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் சூடு செய்து இறைச்சியை உட்கொள்ள வேண்டும்.
இந்த நோய் தடுப்பு பணிக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு குழுக்கள் என அதிவிரைவு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறியான கொண்டை கருகுதல், சளி வடிதல், ரத்தக் கட்டு, தீவனம் எடுக்காமலிருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகை ரத்தினம், அனைத்து தாசில்தார்கள், கோழி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment