Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திருப்பூர் சார் டாக்டர் கே.செந்தில்ராஜ் திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பறவை காய்ச்சல் நோயினால் எந்த வித பறவைகளுக்கும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம், தாலுகா, ஊராட்சி அளவில் இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னாறு பகுதியில் கேரள மாநில எல்லை உள்ளது. அந்த பகுதியில் வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்வதற்கும், இந்த நோய் குறித்து கண்டறிவதற்கும் காவல்துறை, சிறப்பு நோய் தடுப்புக் குழு ஆகியவற்றால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ணைகளை சுற்றிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு கிருமி நாசினி மருந்து போன்றவற்றை தெளிக்க ஏற்பாடு செய்து இந்த நோய் வராமல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோழிகளை 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் சூடு செய்து இறைச்சியை உட்கொள்ள வேண்டும்.
இந்த நோய் தடுப்பு பணிக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு குழுக்கள் என அதிவிரைவு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறியான கொண்டை கருகுதல், சளி வடிதல், ரத்தக் கட்டு, தீவனம் எடுக்காமலிருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகை ரத்தினம், அனைத்து தாசில்தார்கள், கோழி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment