Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திருப்பூர் சார் டாக்டர் கே.செந்தில்ராஜ் திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பறவை காய்ச்சல் நோயினால் எந்த வித பறவைகளுக்கும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம், தாலுகா, ஊராட்சி அளவில் இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னாறு பகுதியில் கேரள மாநில எல்லை உள்ளது. அந்த பகுதியில் வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்வதற்கும், இந்த நோய் குறித்து கண்டறிவதற்கும் காவல்துறை, சிறப்பு நோய் தடுப்புக் குழு ஆகியவற்றால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ணைகளை சுற்றிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு கிருமி நாசினி மருந்து போன்றவற்றை தெளிக்க ஏற்பாடு செய்து இந்த நோய் வராமல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோழிகளை 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் சூடு செய்து இறைச்சியை உட்கொள்ள வேண்டும்.
இந்த நோய் தடுப்பு பணிக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு குழுக்கள் என அதிவிரைவு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறியான கொண்டை கருகுதல், சளி வடிதல், ரத்தக் கட்டு, தீவனம் எடுக்காமலிருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகை ரத்தினம், அனைத்து தாசில்தார்கள், கோழி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment