Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3–ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருந்தொழுவு ஊராட்சி கரட்டுப்புதூர் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் சட்டப்பேரவை விதி எண்.110–ன் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான விடுதியுடன் கூடிய தொழில் பயிற்சி மையத்தை நமது மாவட்டத்தில் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.2 கோடியே ஆயிரம் மதிப்பில் 1,733 பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் பராமரிப்பு தொகையும், ரூ.8 லட்சம் மதிப்பில் 265 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ரூ.2 லட்சம் மதிப்பில் 20 பேருக்கு வங்கிக்கடன் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான நவீன செயற்கை கால் மற்றும் செயற்கை கை, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, காதுக்கு பின் பொருத்தும் நவீன காதொலி கருவி, ஊன்றுகோல், காலிபர் ஆகியவையும், பார்வையற்றவர்களுக்கு ஒளிரும் ஊன்றுகோல், கருப்புக்கண்ணாடி, பேசும் கைக்கடிகாரம், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உறுப்பெருக்கி மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவாச்சலம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனர் தங்கராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment