Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3–ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருந்தொழுவு ஊராட்சி கரட்டுப்புதூர் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் சட்டப்பேரவை விதி எண்.110–ன் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான விடுதியுடன் கூடிய தொழில் பயிற்சி மையத்தை நமது மாவட்டத்தில் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.2 கோடியே ஆயிரம் மதிப்பில் 1,733 பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் பராமரிப்பு தொகையும், ரூ.8 லட்சம் மதிப்பில் 265 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ரூ.2 லட்சம் மதிப்பில் 20 பேருக்கு வங்கிக்கடன் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான நவீன செயற்கை கால் மற்றும் செயற்கை கை, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, காதுக்கு பின் பொருத்தும் நவீன காதொலி கருவி, ஊன்றுகோல், காலிபர் ஆகியவையும், பார்வையற்றவர்களுக்கு ஒளிரும் ஊன்றுகோல், கருப்புக்கண்ணாடி, பேசும் கைக்கடிகாரம், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உறுப்பெருக்கி மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவாச்சலம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனர் தங்கராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment