Thursday, December 04, 2014
9–ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அவினாசியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரின் வீட்டாரும் காதலர் ஜோடிகளை அழைத்து சென்று திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை கருவலூரில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைப்பதாக தகவல் கிடைத்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்படும் தகவல் ஊத்துக்குளி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு கிடைத்தது. தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் மற்றும் ஊத்துக்குளி போலீசார் மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
மணமகளுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றும் இருவீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். மாணவியும் தான் தொடர்ந்து படிப்பதை விரும்பவதாக தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டு சென்றனர். அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment