Thursday, December 04, 2014
9–ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அவினாசியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரின் வீட்டாரும் காதலர் ஜோடிகளை அழைத்து சென்று திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை கருவலூரில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைப்பதாக தகவல் கிடைத்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்படும் தகவல் ஊத்துக்குளி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு கிடைத்தது. தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் மற்றும் ஊத்துக்குளி போலீசார் மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
மணமகளுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றும் இருவீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். மாணவியும் தான் தொடர்ந்து படிப்பதை விரும்பவதாக தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டு சென்றனர். அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment